Friday 18 March 2016


இனிக்கு ஏப்ரல் பூலா??
இன்றைய தமிழ் ஹிந்து 10ம் பக்க தலைப்புகள்

மக்கள் நலக்கூட்டணியை உடைக்க திமுக சதி   - தா.பாண்டியன்
அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் மீள முடியாது - வைகோ
பா.ஜா.க அணிக்கு தேமுதிக நிச்சயம் வரும் - இல.கணேசன்
பாமாகவுக்கு 82% இளைஞர்கள் ஆதரவு - அன்புமணி ராமதாஸ் 

Tuesday 8 March 2016

இலங்கை அகதியின் அவல நிலை

இலங்கை அகதியா இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வாழ்வதை விட கொடுமை இருக்க முடியுமா??? இந்த கேள்வியை தான் மதுரை அகதி முகாமில் வசித்து வந்த இறந்து போன இலங்கை அகதி ரவீந்திரன் மரணம் உணர்த்துகிறது..அகதியாக இருப்பதால் அவர்ககளை சுயமரியாதையுடன் நடத்தக்கூடாதா? அவர்களின் நலனில் அக்கறை இருப்பதாக காட்டிகொள்ளும் அரசுகள் அவர்களின் தன்மானத்தை, சுதந்திரத்தை மறுக்கிறார்கள். இறந்து போன ரவீந்திரன் தாமதமா அகதி முகாமுக்கு வந்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் தனது மகனைப் பார்த்து வருவதற்கு நேரமாகிவிட்டது என்று தெரிவித்தும் வருவாய் துறை அதிகாரிகள் ஒத்துக்கொள்ள வில்லை...அவரின் பேரை அகதிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்...why this கொலைவெறி???  
சுதந்திர போராட்ட வீர் அமீர் ஹம்சா
சுதந்திர போரட்ட வீரர் அமீர் ஹம்சாவின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. ஹம்சா வைர வியாபாரியாக இருந்தார். விடுதலைப் போரின் போது சுபாஷ் சந்திர போஸின் படையில் இணைந்தார். தனது எல்லா செல்வங்களையும் இந்தியாவின் விடுதலை போருக்கு அளித்தார். ஜனவரி 2016ல் ஹம்சா மறைந்தார். இவரின் இறுதி நாட்கள் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் கழிந்தது. தற்போது அவரது பேர குழந்தைகள் படிப்தற்கு கட்டணம் கட்ட முடியாத நிலையில் உள்ளனர். இந்த செய்தியை நியூஸ் 7 தமிழின் மையம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பினோம். இப்போது அந்த குடும்பத்துக்கு உதவ சிலர் முனவந்துள்ளனர்.


https://www.youtube.com/watch?v=WytT5B6B-VA&index=5