Saturday 22 March 2014

என் புத்தக  அலமாரி

தோட்டக்காட்டீ - இரா.வினோத் ,அறம்  பதிப்பகம் 

இலங்கை  மலையாக  மக்கள் பற்றியும் , தேயிலை பறிக்கும் வேலைக்கு சொற்ப கூலி, தொழிலார்களின்  வாழ்கை அந்த தேயிலை  எஸ்டேட்குள் தொலைந்துவிடும் நிலை பற்றியும் இந்த கவிதை நூல் தெளிவாக கவிதை நயத்துடன் பேசுகிறது:



குப்பை  ரத்தம் 

மணமற்றது
குணமற்றது
நிறமற்றது
இனமற்றது

கூலிகள்  குடிக்கும்
குப்பைத்  தேநீர்  மட்டுமல்ல
மரவள்ளி  தின்னும்
மறத் தமிழனின்

செந்நீரும்தான்!


பட்டினி நிலா 

தினந்ததினம்
பிள்ளைகளுக்குச்
சோறூட்டச் சொல்லி
அழுது
அடம்பிடிக்கும்
லயத்தில்
பால் நிலா !

No comments:

Post a Comment